Saturday 19 May 2007

காதலே உயிர் கொடு

என் வீட்டு ரோஜா பூத்து சிரித்த போது,
நான் கொண்ட காதலை சொல்லவில்லையா!

என் வீட்டு மாடியில் மேகங்கள் செதுக்கிய
சிற்பங்கள் சொல்லவில்லையா நான் கொண்ட காதலை!!

நான் சுவாசித்து விட்டுச் சென்ற காற்று,
என் மூச்சில் நீ இருப்பதை உணர்த்தவில்லையா!!!

இயற்க்கையின் மொழி கொண்டு காதல் அனுப்பியுள்ளேன்,
பதில் கொடுத்து விரைவில் உயிர் கொடு!!!!

Wednesday 2 May 2007

மெளனம் கலைத்த "மொழி"

வாழ்க்கையில எத்தனையோ பேர் வாழ பிடிக்காம
தற்கொலை பண்ணிட்டு செத்து போயிடராங்க, ஆனா
நீ ஒருத்தி தான் வாழ்க்கையே கொன்னுட்டு வாழ்ந்திட்டு இருக்க
................................................................

"வாழனும்கிற தவிப்பு உன் கண்ணுல தெரியுது, ஏன் மறைக்கிற
வாழ்ந்து தான் பாரேன்டீ, நிச்சயம் தோக்க மாட்ட........ "

வாழ்க்கையில சில விஷயங்கள கேள்வி கேக்காம நம்பி தான் ஆகனும்,
நீ எடுத்த முடிவு தப்புனு புரியும் போது அத திருத்திக்கிற
வாய்ப்பு கிடைக்காமலே போய்டலாம்.

இசையை எந்த அளவுக்கு நேசிச்சேனோ அந்த அளவுக்கு
உன் மெளனத்தையும் நேசிச்சேன்.

இதுக்கும் மேல நான் என்ன சொல்றது !!!!!!!