Monday 13 August 2007

நீ சொல்லும் வரை.......


மாமா மகனுக்கு கல்யாணம், பத்திரிக்கை கொடுத்து விட்டுக் கேட்டான்,
உங்களுக்கு எப்போது என்று!

பக்கத்து வீட்டுப் பையனின் திருமண ஆல்பத்தை பார்க்கும் போது கேட்டான்,
உங்களை இப்படி எப்போது பார்ப்பது என்று!

உடன் வேலை பார்க்கும் தோழி, மாப்பிள்ளையின் புகைபடத்தை காட்டி விட்டு கேட்டாள், உங்களவரை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று!

அண்ணி குழந்தைக்கு விளையாட்டு காட்டி சோறூட்டும் போது கேட்டாள்,
எப்போது என் மகனுக்கு பெண் பிள்ளை பெற்று தர போகிறீர்கள் என்று!

அக்கா மகனை தூங்க வைக்கும் போது, உன் பிள்ளையின் தொட்டிலை எப்போது ஆட்ட போகிறாய் என்றார் அக்காவின் கணவர்!

அமெரிக்காவில் வசிக்கும் அன்புத் தோழியிடம், எப்போது இந்தியா வருகிறாய் என்று கேட்டால், உன் திருமணத்திற்க்கு வருகிறேன் தேதியை சொல்லு என்கிறாள்!

எல்லாருக்கும் பதிலாக ஒரு சிறு புன்னகை மட்டும்!!!!!!

No comments: