Tuesday 28 August 2007

உயிரை மட்டுமாவது திருப்பி கொடு


உனக்காக காத்திருந்த ஒவ்வொரு வினாடியையும்
திருப்பிக் கேட்கவில்லை

பெற்றோரிடம் இழந்த நம்பிக்கையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த அன்பான உறவுகளை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த இளமையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த தன்னம்பிக்கையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த சுயமரியாதையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த கனவுகளை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த காதலை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த சிரிப்பை
திருப்பிக் கேட்கவில்லை

உனக்குள் இருக்கும் என் உயிரை மட்டும் தான்
திரும்பக் கொடு என்கிறேன்!

நீயொ, கண்ணீர் மட்டும் தருகிறேன்,
காலம் முழுவதும் வைத்துக்கொள் என் நினைவாக என்கிறாய்!!

2 comments:

ஸ்ரீ said...

அருமையான வரிகள் ஸ்ருதி வாழ்த்துக்கள்

Shruthi said...

நன்றி ஸ்ரீ....